ஹீரோவாக களமிறங்கும் கரு.பழனியப்பன்

 

ஹீரோவாக களமிறங்கும் கரு.பழனியப்பன்

கடந்த 2013ஆம் ஆண்டு பார்த்திபன்,விமல், விதார்த் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜன்னல் ஓரம் படத்தைத் தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் வேறெந்த படமும் வெளியாகவில்லை. 

கடந்த 2013ஆம் ஆண்டு பார்த்திபன்,விமல், விதார்த் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜன்னல் ஓரம் படத்தைத் தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் வேறெந்த படமும் வெளியாகவில்லை. 

karupalaniappan

அதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

கரு.பழனியப்பன்

வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட பழங்குடியின மக்களின், வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகவுள்ளது. அதற்காகக் கரு.பழனியப்பன் சிலம்பம் கற்றுள்ளாராம். மேலும் 1988-89 காலகட்டத்தில் கதை பயணிக்கிறது என்றும் 1975 காலகட்டத்தைச் சார்ந்த காட்சிகள் பிளாஷ் பேக்கில் இடம்பெறும் என்று படக்குழு கூறியுள்ளனர்.