ஹீரோயின் இல்லாத ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’!

 

ஹீரோயின் இல்லாத ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’!

நடிகர் கெளதம் கார்த்திக் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் கெளதம் கார்த்திக் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் திரைப்படம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகனாவார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.

இந்நிலையில்,சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் கெளதம் கார்த்திக் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தீமைதான் வெல்லும் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 20 முதல் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தில் ஹீரோயினே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.