ஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை: ஜிம்மிலிருந்து வீடு திரும்பும் போது நடந்த பயங்கரம்!

 

ஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை: ஜிம்மிலிருந்து வீடு திரும்பும் போது  நடந்த பயங்கரம்!

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்

ஹரியானா: ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி. பரிதாபாத்தில் உள்ள செக்டார் 9-ல் வசித்து வரும் இவர் ஜிம்முக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி,  இன்று காலை ஜிம்முக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டுள்ளார் விகாஸ் சவுத்ரி.

  Vikas Chaudhary

அப்போது அவரது காரை முந்தி மற்றொரு கார் சென்றுள்ளது. அந்த காரிலிருந்து இறங்கி வந்த இருவர், விகாஸ் சவுத்ரியை சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விகாஸ் சவுத்ரியை மீட்டு  அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து  சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

  Vikas Chaudhary

விகாஸ் சவுத்ரி படுகொலை செய்யப்பட்ட பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது, இதை அடிப்படையாக வைத்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.