ஸ்ரீரெட்டி டைரி: மறைக்கப்பட்ட தகவல்களோடு படமாகிறது?

 

ஸ்ரீரெட்டி டைரி: மறைக்கப்பட்ட தகவல்களோடு படமாகிறது?

நடிகை ஸ்ரீரெட்டி வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி வருகிறது ஸ்ரீரெட்டி டைரி எனும் திரைப்படம்.

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி வருகிறது ஸ்ரீரெட்டி டைரி எனும் திரைப்படம்.

சுஜி லீக்ஸ்க்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஸ்ரீரெட்டி லீக்ஸ். நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பல நடிகர்களும் இயக்குனர்களும் தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொண்டதாக புகார் தெரிவித்தார். ஏஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரண்ஸ் மற்றும் சுந்தர் சி உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தினார். சில காலம் பரபரப்பாய் பேசப்பட்ட ஸ்ரீரெட்டியின் பிரச்சனை, வெகு விரைவிலேயே முற்றுப் பெற்றது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி டைரி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

டாக்டர் அலாவுதீன் என்பவர் இயக்கும் இத்திரைப்படத்தில், ஸ்ரீரெட்டி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி பதிவு செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.