ஸ்ரீரங்கத்தில் பல்லக்கு உடைந்து கீழே சரிந்த பெருமாள் சிலை… ஆயிரங்கால் மண்டபத்தில் பரிகாரப்பூஜைகள்!
சிறப்பு மிக்க இந்த கோயிலில் பெருமாள் சயனகோலத்தில் அரங்க நாதராகக் காட்சியளிக்கிறார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது. மிகவும் சிறப்பு மிக்க இந்த கோயிலில் பெருமாள் சயனகோலத்தில் அரங்க நாதராகக் காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து நிகழ்ச்சியின் 8ம் நாளையொட்டி, திருமங்கை மன்னன் வேடுபரி உற்சவம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக நடந்த இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து திருமங்கை மன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபமும் நடைபெற்றது.
அப்போது திடீரென்று பல்லக்கு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்தது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பரிகாரப்பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.