ஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா

 

ஸ்ரீதேவி மகனை மணக்கும்  45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா

நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான செய்திக்கு மலைக்கா மறுப்பு தெரிவித்துள்ளார். 

மும்பை:  நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான செய்திக்கு மலைக்கா மறுப்பு தெரிவித்துள்ளார். 

malaika

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார். இதையடுத்து  கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சில் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தற்போது மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார்.

malaika

பாலிவுட் படங்களில் நடித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கும், நடிகை மலைக்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாகப் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.   45 வயதான மலைக்காவும் , 33 வயதான  அர்ஜுன் கபூரும் அடிக்கடி ஒன்றாக பல்வேறு விழாக்களுக்குச் செல்வதால் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. 

arjun

இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி இவர்கள் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவிருக்கும், இந்த திருமணம்   இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. 

ஆனால் இது குறித்து கருத்து  தெரிவித்துள்ள மலைக்கா, இந்த செய்தி வேடிக்கையாக உள்ளது. இது உண்மையில்லை. வெறும் வதந்திதான் என்று கூறியுள்ளார். 
 

இதையும் வாசிக்க: சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்