ஸ்ரீதேவி நினைவு தினம்: குடும்பத்துடன் கலந்து கொண்ட தல அஜித்!

 

ஸ்ரீதேவி நினைவு தினம்: குடும்பத்துடன் கலந்து கொண்ட தல அஜித்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தையொட்டி நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார்.

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தையொட்டி நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் பங்குயேற்றுள்ளார்.

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கு  ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர் அங்குள்ள குளியலறைக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் அவர்  உயிரிழந்தார்.அவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஸ்ரீதேவி நினைவு தின நிகழ்வு இன்று சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் நடைபெற்றது. அதைப்பற்றி திரையுலக பிரபலங்கள் யாருக்கும் தெரிவிக்கப்படாத நிலையில்  நடிகர் அஜித் முதலில் வந்து கலந்து கொண்டார். அவர் வந்த சில நிமிடங்கள் கழித்து அஜீத்தின் மனைவி  ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் வந்து நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்டோர் பங்குக்கேற்றது குறிப்பிடத்தக்கது.