ஸ்ரீதேவியின்  முதலாம் ஆண்டு நினைவு தினம்: சென்னை வீட்டில் சிறப்பு பூஜை!

 

ஸ்ரீதேவியின்  முதலாம் ஆண்டு நினைவு தினம்: சென்னை வீட்டில்  சிறப்பு பூஜை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கு  ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர் அங்குள்ள குளியலறைக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் அவர்  உயிரிழந்தார்.அவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

sridevi

இந்நிலையில் ஸ்ரீதேவியின்  முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி வருகிறது. இதற்கான சிறப்பு பூஜையை  சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீதேவியின் நினைவு தினம் 24 ஆம் தேதிதான் வருகிறது என்றாலும் அவரது நட்சத்திரபடி வரும் 14 ஆம் தேதி திதி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

sridevi

இந்த பூஜையில், போனி கபூர், அவர் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் , போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், அவர் மனைவி சுனிதா கபூர் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்கிறார்கள்.

sridevi

முன்னதாக ஸ்ரீதேவிக்கு 16ம் நாள் சடங்கு சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.