ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட போனி கபூர்! 

 

ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட போனி கபூர்! 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்குத் தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்குத் தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை சென்று 50 ஆண்டுகள் மேல் திரைத்துறையில் சிறந்த நடிகையாகக் கலக்கினார்.  இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பாடல் இறந்த ஸ்ரீதேவியின் நினைவு தின நிகழ்வு சமீபத்தில் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதையடுத்து அவரின் ஒரு சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை இந்தியா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்குக் கொடுக்க உள்ளதாக அவரின் கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.

sri devi

அதைத்தொடர்ந்து ரூ. 40,000 ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு அதில் கிடைக்கும் பணத்தை  ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக இந்த தொகை இருக்கும் என தெரிவித்துள்ளார்.