ஸ்மைலி போட்டு சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த அருண் விஜய்?

 

ஸ்மைலி போட்டு சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த அருண் விஜய்?

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவதை அடுத்து சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

சென்னை: மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவதை அடுத்து சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

நடிகர் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்றே பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன. ராஜேஷ் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாகச் சந்தானம் காமெடி அவரது படத்தில் களை கட்டும். ஆனால் சந்தானம் இல்லாத குறையை நான்கு காமெடி நடிகர்கள் இருந்தும் நிரப்ப முடியவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

arun vijay

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படம் வெளியான சமயத்தில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையானது. இதன் பின் என்னுடைய ட்விட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று பதில் தெரிவித்தார்.

mister local

இந்த நிலையில் மீண்டும் அருண் விஜய் ட்விட்டரில் மிஸ்டர் லோக்கல் படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் படி வாயை மூடும் ஸ்மைலியை ஒன்றை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனைத் தான் சீண்டுகின்றார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையடுத்து அருண்விஜய் இன்னொரு ட்வீட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் ‘எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அது சம்பந்தமான ட்வீட் தான் அந்த ஸ்மைலி. தயவு செய்து யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் இந்த தொழிலை நேசிப்பதால் என்னுடைய பணியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.