ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் தொடங்கிய அஞ்சல் துறை!

 

ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் தொடங்கிய அஞ்சல் துறை!

ஊரடங்கு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. 

எக்ஸ்பிரஸ் மெயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லும் அஞ்சல் துறை, மருந்துகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

post office

யுஏஇ, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, மலேசியா, குவைத், சீனா உள்ளிட்ட 15 நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைப்பதுடன் மெட்ரோ நகரங்கள் மற்றும் பிரதான நகரங்களில் மாலை நேரம் வரை இந்த சேவை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.