‘ஸ்டாலின் முதல்வர் ஆகவும் முடியாது.. வைகோ தூங்கவும் முடியாது’ – ஓபிஎஸ் கிண்டல் பேச்சு

 

‘ஸ்டாலின் முதல்வர் ஆகவும் முடியாது.. வைகோ தூங்கவும் முடியாது’ – ஓபிஎஸ் கிண்டல் பேச்சு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினையும், வைகோவையும் கேலி செய்து பேசியுள்ளார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினையும், வைகோவையும் கேலி செய்து பேசியுள்ளார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மறைந்த தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்பு விழா நடைபெற்றது.

அந்த விழா அழைப்பிதழில் எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினி பெயர் மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இருவரும் முறையான அழைப்பு வரவில்லை என கூறி விழாவில் கலந்துகொள்ளவில்லை. மேலும், இது குறித்து அதிமுக அரசை விமர்சித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று அக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “2009 ஈழப் போரின் போது ராஜபக்சேவிற்கு இந்திய அரசு துணை போனது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் மவுனம் காத்ததால், பல லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக பல தலைவர்கள் பேசினார்கள். 

mgrcentenaryops

இன்றைக்கு அவர்கள் அனைவரும் மவுனமாக இருக்கிறார்கள். ஏனென்றால், திமுகவுடன் கூட்டணி சேரப்போகிறார்களாம். அன்றைக்கு `நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலினை முதல்வராக்க விட மாட்டேன்’ என சொன்னவர்தான் வைகோ. ஆனால் இன்று,`ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் தூங்க மாட்டேன்’ என்கிறார். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகப்போவதில்லை, வைகோவும் தூங்கப்போவதில்லை. 

இவர் ஒருபக்கம் என்றால் டி.டி.வி. தினகரன் மறுபக்கம், டி.டி.வி தினகரனின் 20 ரூபாய் நோட்டு செல்லாமல் போய்விட்டது. ஒரு குண்டூசியை வைத்துக்கொண்டு மலையை குடைய பார்க்கிறார் தினகரன்” என விமர்சித்து பேசியுள்ளார்.