‘ஸ்டாலின் மாதிரி போஸ் கொடுக்க நான் வரவில்லை’ : நீலகிரி ஆய்வில் ஓபிஎஸ் தாக்கு!

 

‘ஸ்டாலின் மாதிரி போஸ்  கொடுக்க நான் வரவில்லை’ : நீலகிரி ஆய்வில் ஓபிஎஸ் தாக்கு!

வெள்ளத்தால் நீலகிரியில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடு கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

‘ஸ்டாலின் மாதிரி போஸ்  கொடுக்க நான் வரவில்லை’ : நீலகிரி ஆய்வில் ஓபிஎஸ் தாக்கு!

நீலகிரி: வெள்ளத்தால் நீலகிரியில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடு கட்டித்தரப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

கனமழையினால் நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அங்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரியை பார்வையிட வந்துள்ளேன். ஸ்டாலின் போல பாஸ் கொடுத்து விட்டு போக வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்பாகப் பேசவேண்டும். பொறுப்பற்ற முறையில் பேச கூடாது’ என்று சாடினார். 

stalin

தொடர்ந்து பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் விளை நிலங்களில் பாதிப்புகளைச் சரி செய்ய ரூ.4.37 கோடி ஒதுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

தேவைப்படுமாயின் மத்தியக் குழுவை அனுப்பி  ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நிலச்சரிவு காரணமாக சுமார்  1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன. தேவைப்படும்பட்சத்தில் அவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும்’ என்றார்.