ஸ்டாலின் கெடுபிடி: உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி? : அப்செட்டான தொண்டர்கள்!?

 

ஸ்டாலின் கெடுபிடி: உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி? : அப்செட்டான தொண்டர்கள்!?

ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு: ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல்

vote ttn

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

அ.கணேசமூர்த்தி  போட்டி

vaiko

அதன்படி வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து  மதிமுக பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என வைகோ தெரிவித்துள்ளார். அதே சமயம் ம.தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் கூறப்பட்டது. 

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி

sun

இந்நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த ஸ்டாலின், மதிமுகவை மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அதிகமுள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னதாக திமுக கூட்டணியில்  திருமாவளவனுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் விழுப்புரம் தொகுதியில் விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: மூளையில்லாத ஆள் பேச்சுக்கு கை தட்டலாமா! நக்கலடித்த நயன்தாரா காதலன்!