ஸ்டாலின் கூறியது கனவாகவே இருக்கும்: ஜெயக்குமார்

 

ஸ்டாலின் கூறியது கனவாகவே இருக்கும்: ஜெயக்குமார்

ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும்.என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும்.என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திமுக பிரமுகர் வில்லவனின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் நேற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

இதை சொன்னால் நான் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க போகிறது. உங்கள் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவா காண வேண்டும்? கனவெல்லாம் காண வேண்டிய அவசியமே கிடையாது. நினைவாகத்தான் உருவாக்கப் போகிறது என பேசியிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ஸ்டாலின், தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. இதனால் எந்த கொம்பன் நினைத்தாலும் இந்த ஆட்சியை அழிக்க முடியாது.எனவே, ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என்று ஸ்டாலின் கூறியது கனவாக மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.