ஸ்டாலின் எப்படியாவது ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்: அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!

 

ஸ்டாலின் எப்படியாவது ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்: அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்..!

ஏன் ஸ்டாலின் மீது வழக்கு இல்லையா? அவரது குடும்பத்தினர் மீது வழக்கு இல்லையா?

இன்று அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக உறுப்பினர்கள் மீது வழக்குப் போடப் பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு , அதிமுக உறுப்பினர்கள் மேல் உள்ள வழக்கு திமுக ஆட்சிக் காலத்தில் போடப் பட்டது. இப்போது வழக்கு இருந்தால் எப்படித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று பதிலளித்துள்ளார்.

Minister Sellur raju

அதனைத் தொடர்ந்து, ஏன் ஸ்டாலின் மீது வழக்கு இல்லையா, அவரது குடும்பத்தினர் மீது வழக்கு இல்லையா, ஒரு விரலைக் காட்டி மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தினால், மீதமுள்ள விரல்கள் அவரை நோக்கும் என்பது ஸ்டாலினுக்குத்  தெரியாதா என்று திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எதிராகப் பேசியுள்ளார். 

மேலும், இடைத்தேர்தல் குறித்துக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், திமுக உள்ளூர் வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்யவில்லை. ஆனால் இம்முறை முதல்வரும் துணை முதல்வரும் இனைந்து அதிமுக இடைத்தேர்தலில் உள்ளூர் போட்டியாளர்களையே தேர்தலில் போட்டியிடச் செய்துள்ளனர். அதனால், அதிமுக தான் தேர்தலில் வெற்றி பெரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.