“ஸ்டாலினை போல கமலும் உளற ஆரம்பித்துவிட்டார்” :எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் சுரா விமர்சனம்!

 

“ஸ்டாலினை போல கமலும் உளற ஆரம்பித்துவிட்டார்” :எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் சுரா விமர்சனம்!

சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர்” என்று கூறினார். 

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது, “கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தவிர்க்க வேண்டும்,  அதே நேரத்தில் முன்னேறவும் வேண்டும். ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர்” என்று கூறினார். 

ff

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன், “உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். 

ff

இதுகுறித்து எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் சுரா தனது பேஸ்புக் பக்கத்தில், “மு.க.ஸ்டாலினைப் போல நடிகா் கமல்ஹாஸனும் அறிக்கை என்ற பெயாில்…தினமும் தன் பெயா் பத்திாிகையில் வர வேண்டும் என்பதற்காக எதையாவது உளற வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விட்டாா் போலிருக்கிறது. உதாரணத்திற்கு…இன்றைய ‘தினத்தந்தி’யில் பிரசுரமாகியிருக்கும் கமலின் முரண்பாடு நிறைந்த உளறல்… ‘உணவு இன்றி அழும் குழந்தைக்கும்,பணம் இன்றி தவிக்கும் ஏழைக்கும் இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமாின் திட்டத்தை வரவேற்கிறோம்.அதே நேரம் நடுத்தர,அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலன் அளிக்குமா?காலத்தே கிடைக்குமா?’இதுதான் கமலின் அறிக்கை…ஐந்து வாிகளிலேயே எந்த அளவிற்கு தெளிவின்மை! அழும் குழந்தைக்கும்,தவிக்கும் ஏழைக்கும் நரேந்திர மோடி ஏதோ திட்டத்தை அறிவித்து விட்டதாக கூறி,அதற்கு நன்றி தொிவிக்கும் கமல், அடுத்த கணமே ‘அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலன் அளிக்குமா?’என்று கேட்கிறாா்.
அரசியல்வாதி அங்கியை அணிய ஆரம்பித்து விட்ட கமல்,சுய உணா்வுடன்தான் அறிக்கையை வெளியிடுகிறாரா?பத்திாிகைகளுக்கு அறிக்கையை அனுப்புவதற்கு முன்னால், மீண்டுமொரு முறை வாசித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்…கமல். இல்லாவிட்டால்…
இந்த ‘வெண்டைக்காய் குணம்’தான் வெளியே தொியும்” என்று பதிவிட்டுள்ளார்.