ஸ்டாலினை ‘தாத்தா’ ஆக்கிய உசிலம்பட்டி சிறுமி

 

ஸ்டாலினை ‘தாத்தா’ ஆக்கிய உசிலம்பட்டி சிறுமி

மதுரை: கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலினை ‘தாத்தா’ என்றழைத்து வணக்கம் போட்டதால் கிராம சபைக் கூட்டத்தில் கலகல

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிம் குறைகளைக் கேட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கியப்புள்ளிகள் கலந்து கொண்டு மக்களோடுக் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் உசிலம்பட்டியில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் மக்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருவர் ஸ்டாலினைப் புகழ்ந்து பாடல் ஒன்றைப் பாடிவிட்டு ‘ஸ்டாலின் தாத்தா வணக்கம்’ எனக் கூறினார்.

stalin

அதைக் கேட்டதும் ஸ்டாலினுக்கு சிரிப்பு தாங்கவில்லை. கூட்டத்தினரும் சிரித்தனர். அப்போது அந்தச் சிறுமியை தன்னருகே அழைத்த ஸ்டாலின், ‘நான் தாத்தா இல்லம்மா… மாமா’ என்று நகைச்சுவையுடன் சிரித்தபடி கூறினார்.

இதைக்கேட்டுக் கூச்சத்துடன் நெளிந்த சிறுமியின் பெயர், விவரங்களை கேட்டுக்கொண்ட ஸ்டாலின் அவரை பாராட்டி அனுப்பினார்.