ஸ்டாலினுக்கு போனப் போட்டு கவலையே படாதீங்க நாட்டு மக்கள நா பாத்துகுறேனு சொன்ன மோடி…

 

ஸ்டாலினுக்கு போனப் போட்டு கவலையே படாதீங்க நாட்டு மக்கள நா பாத்துகுறேனு சொன்ன மோடி…

மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து முதலில் விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து திமுக தலைவரும் கேட்டறிந்தார்.

மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து முதலில் விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து திமுக தலைவரும் கேட்டறிந்தார்.

ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல் தந்துள்ளார் என்றும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்றும் திமுக தலைவர் உறுதியளித்தார்.

மோடி, ஸ்டாலின்

‘ மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும்’ என்று பிரதமரிடம் திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,  ‘மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், திமுக தலைவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.