ஸ்டாலினுக்கு பொறாமை : அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேட்டி

 

ஸ்டாலினுக்கு பொறாமை : அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேட்டி

மக்களின் நன்மதிப்பை பெற்ற முதல்வரைக் கண்டு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பொறாமை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதய குமார் தெரிவித்தார். 

மக்களின் நன்மதிப்பை பெற்ற முதல்வரைக் கண்டு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பொறாமை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதய குமார் தெரிவித்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 13 நாட்கள் வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டதின் விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நேற்று ஸ்டாலின் கூறினார். இதைனையடுத்து இன்று ராமநாதபுரம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதய குமார், முதல்வரின் வெளி நாடு சுற்று பயணத்தை எதிர் கட்சி தலைவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வர் உலகத்தமிழர்கள் நன்மதிப்பை பெற்றதால் எதிர் கட்சி தலைவருக்கு பொறுக்க வில்லை என்று  கூறினார். 

குறிப்பாக, ஜெயலலிதா அவர்கள் கண்ட கனவை முதல்வர் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றி வருவதை எண்ணி பெருமிதம் கொள்வதாக  தெரிவித்தார்.