ஸ்டஃப்கூல் நிறுவனத்தின் புதிய இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

 

ஸ்டஃப்கூல் நிறுவனத்தின் புதிய இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை ஸ்டஃப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை ஸ்டஃப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனை ஸ்டஃப்கூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆடியோ சாதனங்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்போன் மாடல்கள் ஆகியவற்றை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஹெட்போன் மாடல் ஸ்டஃப்கூல் மாண்டி என அழைக்கப்படுகிறது. இதில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் ஹெட்போனை இணைக்க முடியும்.

வயர்லெஸ் ஹெட்போனாக இது இருந்தாலும், நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி உள்ளது. மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கொண்டிருப்பதால் இந்த ஹெட்போனை தொடாமலேயே வாய்ஸ்கால்களை மேற்கொள்ளவும், இசையை கேட்டும் அனுபவிக்கலாம். மேலும் இந்த புதிய மாடல் ஹெட்போனில் காந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஹெட்போனை பயன்படுத்தாத சமயங்களில் இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 180 எம்.ஏ.ஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 9 மணி நேரங்கள் வரை  தொடர்ச்சியாக ஹெட்போனை பயன்படுத்த முடியும். ஹெட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் பிடிக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டஃப்கூல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சில ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த புதிய மாடல் ஹெட்போனை வாங்க முடியும்.