ஷோ ரூம் முன்பு தன் புது வண்டியை கொளுத்திய நபரால் பரபரப்பு: நடந்தது என்ன?

 

ஷோ ரூம் முன்பு தன் புது வண்டியை கொளுத்திய நபரால் பரபரப்பு: நடந்தது என்ன?

அயனாவரம் பகுதியில் ஷோ ரூம் முன்பு வைத்து தன் சொந்த பைக்கை நபர் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அயனாவரம் பகுதியில் ஷோ ரூம் முன்பு வைத்து தன் சொந்த பைக்கை நபர் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த அயனாவரம் அருகே வசித்து வருபவர் கோபி. இவர் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள தனியார் ஷோ ரூம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் 65,000 செலுத்தி புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

வாங்கியது முதல் பைக்கில் சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து பல முறை ஷோ ரூம் நிர்வாகிகளிடம், கோபி முறையிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கோபியின் குற்றச்சாட்டுகளை ஷோ ரூம் ஊழியர்கள் உதாசினப்படுத்தியதுடன், அவரை கேலியும் செய்துள்ளனர்.

gopi bike

இந்நிலையில், ஊழியர்களின் அலட்சியத்தால் மனமுடைந்த கோபி, இன்று காலை ஷோ ரூம் முன்பாக தனது பைக்கை நிறுத்திவிட்டு பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

fire

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.