ஷேக்ஸ்பியர் படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

 

ஷேக்ஸ்பியர் படத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

சென்னை: வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான ‘மெக்பெத்’ தமிழில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது.  1606 ஆம் ஆண்டு முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை 413 ஆண்டுகளுக்குப் பிறகு படமாக எடுக்கின்றனர். இதற்கு ‘பகைவருக்கு அருள்வாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பினை, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தின் இயக்குநர் அனீஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். ஜிப்ரானின் இசை, 96 படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் என்று பலமான தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் இணைந்துள்ளனர்.  

sakshi agarwal

இந்த நிலையில் இதில் நடிகை சாக்‌ஷி அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தனக்கும் ஒரு வலிமையான கதாபாத்திரம் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்த சாக்‌ஷி அகர்வாலுக்கு இதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சாக்‌ஷி ஏமாறவில்லை.

.