ஷெரின் எழுதிய லெட்டரை குப்பையிலிருந்து எடுத்து படித்த தர்ஷன்

 

ஷெரின் எழுதிய லெட்டரை குப்பையிலிருந்து எடுத்து படித்த தர்ஷன்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம் இந்த ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் உள்ளனர். 

letter

நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க்காக யாஷிகா ஷெரினை  கடிதம் எழுத சொன்னதுடன், நீங்க யாருக்கு கடிதம் எழுத போறீங்களோ  அவங்க பேரு  எழுத தேவையில்லை. இது டெலிகாஸ்ட் ஆகாது என்றார்.  இதனால் ஆர்வமான ஷெரின், தனியாக அமர்ந்து தர்ஷனுக்காக கடிதம் எழுதி முடித்தார். இதில் பயங்கர டிவிஸ்ட்டாக பிக் பாஸ், ஷெரின் யாருக்கு கடிதம் எழுதுனங்களோ அதை அவரிடம் கொடுத்துவிட்டு கிளம்புங்க என்று மகத் மற்றும் யாஷிகாவுக்கு கட்டளையிட ஷாக் ஆன ஷெரின் உடனே எழுதிய கடிதத்தைக் கிழித்து குப்பையில் போட்டார். பின்பு இரவு 1.30 மணிக்கு அமர்ந்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் அந்த கடிதத்தை ஏன்  படிச்ச? நீ படிக்கணும்னா நானே குடுத்திருக்க மாட்டேனா? என்று சொல்ல தர்ஷன் என் நாட்டை நான் தான் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அதனால் தான் குப்பையை எடுத்து பார்த்தேன். அதில் இந்த வரி இருந்தது என்று சொல்கிறார். அதற்கு சாண்டி  நான் அப்போதே சொன்னேன்..என்ன தைரியம் அவனுக்கு..யாருக்கு என்று  தர்ஷன் கேட்க அவனுக்கு என்று அழுத்தமாகச் சொல்கிறார்.