‘ஷூவுக்குள் பதுங்கி இருந்து கடித்த பாம்பு’ : மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் பெண் !

 

‘ஷூவுக்குள் பதுங்கி இருந்து கடித்த பாம்பு’ : மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் பெண் !

வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டு, வீட்டின் வெளியே இருந்த காலணிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார்.

சென்னை கே.கே நகரை அடுத்த கன்னிகாபுரத்தில் வசித்து வரும் தம்பதி பழனி- சுமித்ரா தம்பதி. பழனி கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை சுமித்ரா வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டு, வீட்டின் வெளியே இருந்த காலணிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே இருந்த ஷூ ஒன்றில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. 

ttn

பாம்பு இருப்பதை அறியாத சுமித்ரா, சுத்தம் செய்வதற்காக ஷூவை கையில் எடுத்துள்ளார். அந்த பாம்பு சுமத்ராவைக் கையில் கொத்தியுள்ளது. கடித்தவுடன் சுமித்ரா கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சுமத்ராவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.