ஷாக்காயிட்டேன்: லீக்கான பர்ஸ்ட் லுக் குறித்து அருண் விஜய் வருத்தம்!
பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
சென்னை: பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய். குற்றம் 23,செக்க சிவந்த வானம் என்று தனது செகண்ட் இன்னிங்ஸில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய தடம் அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது பாக்ஸர் , அக்னி சிறகுகள், சாஹோ என்று செம பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாக்ஸர் படத்தை பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார். ரித்திகா சிங், மீரா என்கிற வேடத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜையில் கூட உடம்பு முழுக்க டாட்டூ, குடுமி என வந்து அசத்தினார். இதற்கிடையில் பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது. அதை பார்த்து தானே அதிர்ச்சியாகிவிட்டதாக அருண் விஜய் நள்ளிரவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Reason behind sudden launch of #Boxer’s first look… pic.twitter.com/oUxcKLu5Qz
— ArunVijay (@arunvijayno1) July 4, 2019
அதில் அவர் கூறியதாவது, ‘ பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் திடீரென வெளியானது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதை பெரிய பில்டப் செய்து வெளியிடலாம் என இருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே லீக்கானதால், முன்னறிவிப்பு இன்றி வெளியிடப்பட்டது’ என்று பேசியுள்ளார்.