வைரமுத்து மேட்டருக்குக் கூட இந்த அளவுக்கு பொங்கலையேம்மா நீ?’…மீண்டும் ஒரு சின்மயி பஞ்சாயத்து..

 

வைரமுத்து மேட்டருக்குக் கூட இந்த அளவுக்கு பொங்கலையேம்மா நீ?’…மீண்டும் ஒரு சின்மயி பஞ்சாயத்து..

தன் சொந்தப் பிரச்சினைக்கும் பொள்ளாச்சி விவகாரத்துக்கும் ட்விட்டரிலேயே கம்பு சுத்திக்கொண்டிருந்த சின்மயி முதல் முறையாகத் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு போலீஸ்  அனுமதி கேட்டிருப்பது

உச்ச நீதிமன்ற நீதிபதியை பாலியல் வழக்கிலிருந்து விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடப்போவதாக பாடகி சின்மயி அறிவித்திருப்பதை ஒட்டி ட்விட்டர் பக்கங்களில் மீண்டும் பலத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

chinmayi

நடிகை கஸ்தூரியின் வழியில் எப்போதும் பரபரப்பான செய்திகளில் இருக்கப் பிரியப்படும் பாடகி சின்மயி சில மாதங்களாக கவிஞர் வைரமுத்துவை ஊறுகாயாக்கி மி டு’வில் பிரபலமாக இருந்தார். அடுத்து பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி குளிர் காய்ந்து வந்தார்.

ஆனால் தன் சொந்தப் பிரச்சினைக்கும் பொள்ளாச்சி விவகாரத்துக்கும் ட்விட்டரிலேயே கம்பு சுத்திக்கொண்டிருந்த சின்மயி முதல் முறையாகத் தெருவில் இறங்கிப் போராடுவதற்கு போலீஸ்  அனுமதி கேட்டிருப்பது டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய் விவகாரத்திற்காக.

chinmayi

சும்மா இருப்பார்களா அவரது ரசிகர்கள் ‘வைரமுத்து மேட்டருக்குக்  கூட இவ்வளவு பொங்கலையேம்மா நீ…ஆஹா சிங்கம் களம் இறங்கிருச்சி’…என்று துவங்கி ஏகப்பட்ட கலாய்ப்புகள். இவைகளால் மேலும் சினம் கொண்ட சிங்கமாக மாறிய சின்மயி, …சராசரி இந்திய ஆண்மனம் எவ்வள்வு கீழ்த்தரமாக இருக்கிறது பாருங்கள்’என்று பொங்கி வருகிறார்.

ஆபிசர்ஸ் சீக்கிரம் சின்மயி மேடத்துக்கு போலீஸ் பெர்மிஷன் கொடுங்க…அவங்களே தெருவுல இறங்கிப் போராடுனா பாலியல் குற்றம் குறைய நிறைய சான்ஸ் இருக்கு…