வைரமுத்து மீதான சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டு! – ஹெச்.ராஜா சொன்னது இதுதான்!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வைரமுத்து தான் பெற்ற விருதுகளை திரும்பத் தர வேண்டும் என ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வைரமுத்து தான் பெற்ற விருதுகளை திரும்பத் தர வேண்டும் என ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் மி டூ விவகாரம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், பத்திரிகையாளராகப் பணியாற்றிய போது தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு பெண்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்நிலையில், அந்தப் புகார்களுக்கு பொறுப்பேற்று இன்று காலை தன் மத்திய இணை அமைச்சர் பதவியை எம்.ஜே. அக்பர் ராஜிநாமா செய்திருந்தார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எம்.ஜே.அக்பர் தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதேபோல், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வைரமுத்துவும், இதுவரை தான் பெற்றுள்ள விருதுகளைத் திரும்ப வழங்குவதே சரியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Pl demand that Mr. Vairamuthu to surrender all the awards given to him https://t.co/reGiMOtJh1
— H Raja (@HRajaBJP) October 17, 2018
ஏற்கனவே, ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை மிகக்கடுமையாக ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுவரை சின்மயி விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனமாக இருந்த ஹெச்.ராஜா தற்போது இவ்வாறு பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.