வைரமுத்து குடும்பத்தில் ஓர் ஆங்கில கவிஞர்…மனம் தளர்பவர்களுக்கு மருந்தளிக்கும் கவிதை தொகுப்பு!
வைரமுத்துவின் மருமகளும் மதன் கார்க்கியின் மனைவியான நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.
7 முறை தேசிய விருதுகள் பெற்ற கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் மிகமுக்கிய கவிஞராக உள்ள
வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்துவும் கவிஞராகவே உள்ளனர். அந்த வரிசையில் வைரமுத்துவின் மருமகளும் மதன் கார்க்கியின் மனைவியான நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.
தர்பார், சர்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நூலானது இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார்.
இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி மதன் கார்க்கி, கடந்த ஓராண்டாகத் தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழியில் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.