“வைப்பாட்டி குழந்தையை நான் வளர்க்கணுமா?” -கணவரின் செயலால் காண்டான மனைவி

 

“வைப்பாட்டி குழந்தையை நான் வளர்க்கணுமா?” -கணவரின் செயலால் காண்டான மனைவி

ஒரு ஆட்டோ ட்ரைவரின் சின்ன வீட்டுக்கு பிறந்த குழந்தையை அனாதை என்று கூறி தன்னுடைய மனைவியிடமே வளர்க்க சொன்னவரை போலீசார் கைது செய்தார்கள்

“வைப்பாட்டி குழந்தையை நான் வளர்க்கணுமா?” -கணவரின் செயலால் காண்டான மனைவி

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் வேஜல்பூரில் உள்ள ஷியாம்சுந்தர் சொசைட்டியில் வசிக்கும் ஷேக் என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார் .

அதன் பிறகு அந்த இரண்டாவது மனைவி திடீரென கர்ப்பமானார் .அதன் காரணமாக அவருக்கு கடந்த வாரம் ஞாயிற்று கிழமை ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த பெண் குழந்தையை அந்த ஷேக் தன்னுடைய முதல் மனைவியிடம் கொடுத்து வளர்க்க ஒரு திட்டம் தீட்டினார் .அதன் படி அவர் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு போய் ,தன்னுடைய முதல் மனைவியிடம் கொடுத்து ,இந்த குழந்தை அனாதையாக கிடந்தது ,நாயிடமிருந்து காப்பாற்றி தூக்கி வந்துள்ளேன் என்றார் .மேலும் இந்த குழந்தையை நாமே வளர்க்கலாம் என்றார் .இதை கேட்ட அவரின் முதல் மனைவிக்கு சந்தேகம் வந்தது .அதனால் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்  .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்கள் .

அப்போது நடந்த விசாரணையில் .இந்த குழந்தை அவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்ததையும் ,அதை  அவர்கள் வளர்க்க முடியாமல் அவரின் முதல் மனைவியிடம் கொண்டு வந்ததையும் கண்டரிந்தார்கள் .அதன் பிறகு அந்த தம்பதிகள் மீது புதன் கிழமையன்று வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்துகிறார்கள் .

“வைப்பாட்டி குழந்தையை நான் வளர்க்கணுமா?” -கணவரின் செயலால் காண்டான மனைவி