வைச்சு செஞ்சிடுவாங்களோ… அலறும் அதிமுக எம்.பி..!

 

வைச்சு செஞ்சிடுவாங்களோ… அலறும் அதிமுக எம்.பி..!

தன் மேல் தலைமைக்கு நம்பிக்கையும், மரியாதையும் குறைந்து விடுமோ என வைத்திலிங்கம் கவலைப்படுகிறாராம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஐவர் குழுவில் ஒருவராகவும், அமைச்சராகவும் இருந்தவர் தஞ்சை, ஒரத்தநாட்டைச் சேர்ந்த வைத்திலிங்கம்.

 2016 தேர்தலில் தோற்றுவிட்ட இவரை ஜெயலலிதா, சசிகலா தயவில் வைத்திலிங்கத்தை ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார். இப்போது அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியையும், 14 ஒன்றியங்களில் 12ஐ தி.மு.க., பிடித்து விட்டது. பக்கத்தில் இருக்கிற திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பெரும்பாலான பதவிகளை தி.மு.க.,வே வெற்றி பெற்றது.

vaithilingam

தன் மேல் தலைமைக்கு நம்பிக்கையும், மரியாதையும் குறைந்து விடுமோ என  வைத்திலிங்கம்  கவலைப்படுகிறாராம். இதனால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய், சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததாக  கட்சியினர் கூறுகின்றனர்.