வைகோவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கு

 

வைகோவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கு

தமிழக அரசை விமர்சிக்க வைகோவுக்கு தகுதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி: தமிழக அரசை விமர்சிக்க வைகோவுக்கு தகுதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது. ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு பற்றி குறை கூறிவருகிறார். அவருக்கு தமிழக அரசை பற்றி குறை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரைப்போல் நேரத்திற்கு தகுந்தார் போல் மாற்றி பேச முடியாது.

புயல் நிவாரண நிதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாது. இந்திய நாட்டில் தமிழகமும் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும் என்றார்.