‘வைகோவின் ராசி எப்புடி’ : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

 

‘வைகோவின் ராசி எப்புடி’ : மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மதிமுகவினரின் பதிலடி!

வைகோவை ராசி இல்லாதவர் என்று  விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் தற்போது பதிலடி கொடுத்துள்ளனர்.

மதுரை: வைகோவை ராசி இல்லாதவர் என்று  விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் தற்போது பதிலடி கொடுத்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். அவரின் பேச்சு, அரசியல் நகர்வு ஒவ்வொன்றும் அவர் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று  சொல்லும்  அளவிற்கு இருந்தது. ஆனால் அது வெறும் வெற்று  வார்த்தையால் போனது தான் காலத்தின் கொடுமை.

vaiko

திமுகவுடன் சலசலப்பு, அதிமுகவில் வாக்குவாதம் என வைகோவின் அரசியல் நகர்வு புரியாத புதிராகவே இருந்தது. கடந்த தேர்தலில் மக்கள் நல  கூட்டணி என்ற பெயரில் சிலருடன் கூட்டு சேர்ந்த வைகோவுக்கு தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வைகோ எங்கு சென்றாலும் அங்கு  ராசி இருக்காது. தேர்தலில் ஒரு அணி தோற்க கூடாது என்றால் அந்த கூட்டணியில் வைகோ இருக்க கூடாது என்று மீம்ஸ்கள் மூலமாகவும் சிலர் வெளிப்படையாகவுமே  சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

vaiko

இதையடுத்து கருணாநிதியின் இறப்பிற்கு பிறகு திமுகவுடன் இணைந்த வைகோ, மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். தி.மு.க. கூட்டணிக்கா வைகோ தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.

mdmk

 இந்நிலையில் தாங்கள் வாங்கிய அடிக்கு பதிலடியாக, மதுரையில் மதிமுகவினர் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம்’  என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.