வைகை ஆற்றில் மூழ்கிய பெண்களை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சகோதரர்கள்!

 

வைகை ஆற்றில் மூழ்கிய பெண்களை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சகோதரர்கள்!

வைகை ஆற்றில் மூழ்கிய மூன்று பெண்களை காப்பாற்றிவிட்டு சென்னையை சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வைகை ஆற்றில் மூழ்கிய மூன்று பெண்களை காப்பாற்றிவிட்டு சென்னையை சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அணைப்பட்டி கிராமத்திலுள்ள ஆஞ்சிநேயர் கோயில் படித்துரையில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாரியப்பன் என்பரின் மகன்கள் சதீஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் குமரேசன் ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு உள்ளூரை சேர்ந்தமூன்று பெண்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரத்தொடங்கியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளடு. இதில் சிக்கிய அந்த மூன்று பெண்களும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

 

brothersஇதனைப்பார்த்த சதீஷ்குமாரும், குமரேசனும் ஆற்றில் குதித்து மூன்று பெண்களையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் சதீஷ்குமாரையும், குமரேசனையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.