வைகை ஆற்றில் தம்பியைக் காப்பாற்ற அண்ணன் விழுந்து உயிரிழந்த சோகம் !

 

வைகை ஆற்றில் தம்பியைக் காப்பாற்ற அண்ணன் விழுந்து உயிரிழந்த சோகம் !

மதுரை பெத்தானியபுரம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.

வைகை ஆற்றின் மீன்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றிற்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த ஆற்றில் மதுரை பெத்தானியபுரம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆகாஷ் என்ற சிறுவன் முதலில் ஆற்றில் குதித்துள்ளான். குதித்த உடனே ஆற்றில் அந்த சிறுவன் மூழ்கியுள்ளான். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவனது அண்ணன் பாலமுருகன் (10) ஆற்றில் குதித்து தனது தம்பியை மீட்டு மேலே ஏற்றியுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக பாலமுருகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். 

bala

பாலமுருகனுடன் சென்ற சிறுவர்கள் உடனடியாக அவனின் பெற்றோர்களுக்குத் தகவல் அளிக்க, அவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின், அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வெகுநேரமாக அவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின், 20 நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாலமுருகனின் உடலைத் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.