வேளாண் மண்டலம் சட்ட மசோதா நிறைவேற்றம் : விவசாயிகள் வரவேற்பு !

 

வேளாண் மண்டலம் சட்ட மசோதா நிறைவேற்றம் : விவசாயிகள் வரவேற்பு !

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். அப்போது மு.க ஸ்டாலின் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன் படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். அப்போது மு.க ஸ்டாலின் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.