வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 8 தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது .

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழா இன்று தொடங்கி செப்டம்பர் 8 தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது .

விழாவையொட்டி 1800 போலீசாரும், 300 ஊர்காவல் படையினரும்,  15 உதவி காவல் மையங்களும், ஐந்து குற்றத்தடுப்பு காவல்படை குழுக்களும்,  தீயணைப்பு படை வீரர்களும்,  65 கண்காணிப்பு கேமராக்களும், 500 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

velankanni

உலக புகழ்ப்பெற்ற கொடியேற்றத்தைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாதா உருவம் பொறித்த பேராலாய கொடி இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.