வேல்முருகன் மீது மீண்டும் வழக்குப்பதிவு

 

வேல்முருகன் மீது மீண்டும் வழக்குப்பதிவு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சுங்கச் சாவடியை தாக்கியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் சிறிது நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த மாதம் 26-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசினார். இதனையடுத்து கலவரத்தை தூண்டுவது,பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.