வேலை பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் இளம்பெண் தற்கொலை! 

 

வேலை பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் இளம்பெண் தற்கொலை! 

ஹைதரபாத்தில் உள்ள ஐடி  நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்க்கும் இளம்பெண் ஒருவர் தனது ஒப்பந்தம் முடியவுள்ளதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஹைதரபாத்தில் உள்ள ஐடி  நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்க்கும் இளம்பெண் ஒருவர் தனது ஒப்பந்தம் முடியவுள்ளதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரிணி. இவர் அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த சில நாட்களில் அந்த ஒப்பந்தம் முடியவுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஹரிணி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  விடுதி உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரினியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹரிணியின் அறையிலிருந்து கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். 

ID Card

அந்த கடிதத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு எழுதி இருந்தது. ஹரிணியின் இறப்பு குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.