வேலையில்லாத விரக்தியே பாலியல் வன்கொடுமைக்கு காரணம்: பாஜக எம்.எல்.ஏ. அதிர்ச்சி கருத்து!

 

வேலையில்லாத விரக்தியே பாலியல் வன்கொடுமைக்கு காரணம்: பாஜக எம்.எல்.ஏ. அதிர்ச்சி கருத்து!

வேலையில்லாத  விரக்தியின் காரணமாக தான் இளைஞர்கள்  பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ., பிரேம்லதா சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானா: வேலையில்லாத  விரக்தியின் காரணமாக தான் இளைஞர்கள்  பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ., பிரேம்லதா சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானா மாநிலத்தில்  19 வயது பெண் 12 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட  ராணுவ வீரர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாஜக பெண் எம்.எல்.ஏ., பிரேம்லதா சிங் கூறுகையில், ‘வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தான் விரக்தி காரணமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். தவறான கலாச்சாரம் நமது சமூகத்தில் பரவ துவங்கியுள்ளது. பெண்களை போதைப் பொருளாக பார்க்கும் தவறான எண்ணம் ஆண்களிடம் அதிரிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.