‘வேலைக்கு போ’ என்று அறிவுரை சொன்ன தாயை அடித்து கொன்ற மகன்: பொள்ளாச்சியில் பரபரப்பு!?
வேலைக்கு செல்லுமாறு தாய் கூறிய தாயை மகன் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி: வேலைக்கு செல்லுமாறு தாய் கூறிய தாயை மகன் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலாம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் – பெருமாள்சாமி தம்பதி. பெருமாள்சாமி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட மகன் மௌன குருசாமியுடன் செல்லம்மாள் வசித்து வந்துள்ளார். மௌன குருசாமி பி.எஸ்.சி. படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்லம்மாள் மகனை வேலைக்கு செல்லுமாறு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி, வழக்கம்போல் மகனை வேலைக்கு செல் என்று செல்லம்மாள் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, மௌனகுருசாமி, செல்லம்மாளை தள்ளிவிட்டு கட்டையால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதையடுத்து அவரது மகன் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பியோடிய மௌனகுரு சாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.