‘வேலைக்கு போக சொன்னதால் கொலை செய்தேன்’ : கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

 

‘வேலைக்கு போக சொன்னதால் கொலை செய்தேன்’ :  கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

நான் கொத்தனார் வேலைக்கு போவேன். சிலகாலமாக அதற்கும் போகவில்லை. இதனால் என்னை வேலைக்கு போக சொல்லி என் மனைவி வற்புறுத்தி வந்தார்

தூத்துக்குடி : வேலைக்குப் போக சொல்லிய கர்ப்பமான மனைவியை கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு கடந்த பிப்ரவரி சண்முகப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சண்முகப்பிரியா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார்.  இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் மாரியப்பன் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த மாரியப்பனின்  சகோதரி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த  போது  மாரியப்பனும், சண்முகப்பிரியாவும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். 

tuticorin

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மாரியப்பன் மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முகப்பிரியா  ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற மாரியப்பனுக்கு  மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சிகிச்சையிலிருந்த மாரியப்பனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ‘நான் கொத்தனார் வேலைக்கு போவேன். சிலகாலமாக அதற்கும் போகவில்லை. இதனால் என்னை வேலைக்கு போக சொல்லி என் மனைவி வற்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று எனக்கும் என் மனைவிக்கும்  தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் வீட்டிலிருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் அவளை குத்தி கொலை செய்தேன். அவள் இறந்து விட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் என்னை நானே கத்தியால் கழுத்து, கைகளில் கீறிக்கொண்டேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

murder

இதுகுறித்து கூறியுள்ள அப்பகுதி மக்கள், வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்த அவனுக்கு அப்பா,அம்மா இல்லை.அக்கா மட்டும் தான்.கல்யாணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று நினைத்து அவன் அக்கா திருமணம் செய்து வைத்தாள். ஆனால்  அவன் திருந்தவே இல்லை. கர்ப்பிணி என்று கூற பார்க்காமல் கொலை செய்து விட்டான்’ என்று கண்ணீருடன் கூறுகின்றனர்.  திருமணமான சில மாதங்களில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.