வேலைக்கு செல்ல முடியவில்லை: மகளை கொன்றேன்; கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்!

 

வேலைக்கு செல்ல முடியவில்லை: மகளை கொன்றேன்; கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்!

பெற்ற  தாயே மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: பெற்ற  தாயே மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு சஜிதா என்ற மனைவியும், சுபாஷினி, ஸ்ரீஹர்ஷினி என்ற மகள்களும் உள்ளனர்.  பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  பிரபாகரன் திடீரென்று இறந்து விட சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வந்தார்.

suicide

இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி இரவு மகள்கள் வேறு அறையில் தூங்கவைத்து விட்டு, சஜிதா மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். இதையடுத்து  காலை சுபாஷினி எழுந்து பார்த்தபோது தன்னுடன் தூங்கிய தனது சகோதரி மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்ரீஹர்ஷினியை தேடிப்பார்த்தனர். ஆனால் அவள் கிடைக்காததால் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று சஜிதா அழுது கொண்டே புகார் அளித்தார்.

baby

இதையடுத்து, போலீசார் சஜிதாவை அழைத்துக் கொண்டு அவர் வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேடி பார்த்த போது,  அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் பொம்மையுடன் சிறுமி ஸ்ரீஹர்ஷினி தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து, சிறுமியின் மரணம் குறித்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சஜிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘எனது கணவர் பிரபாகரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ரூ.2 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் திடீரென்று இறந்து விட்டார். எனவே கடனை கட்டுவதற்கும், குடும்பத்தைக் கவனிக்கவும் வேண்டி நான் அவர் பணி செய்த அதே பங்களாவில் பணிபுரிந்து கொண்டே, வெளியே தோட்ட வேலைக்கும் சென்று வந்தேன். எனது 2–வது மகளுக்கு 4½ வயதே ஆவதால் அவளைத் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது என்பது சிரமமாக இருந்தது. எனவே மகளைக் கொன்று விட முடிவு செய்தேன். எனவே இரவு மது அருந்தி விட்டு எனது மனதை கல்லாக்கிக்கொண்டேன். நள்ளிரவு 1.30 மணியளவில் பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றாக தூங்கிக்கொண்டிருந்த எனது மகளைத் தூக்கி கொண்டு நான் வேலை பார்க்கும் பங்களாவிற்கு சென்றேன். பின்னர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அவளை மூழ்கடித்து கொலை செய்து விட்டு தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து படுத்து விட்டேன்’ என்றார்.