வேலைக்காரரின் உணவை சாப்பிட்ட தந்தை: கத்தியால் குத்தி கொலை செய்த மகன்; அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

வேலைக்காரரின்  உணவை சாப்பிட்ட தந்தை: கத்தியால் குத்தி கொலை செய்த மகன்; அதிர்ச்சி ரிப்போர்ட்!

தன்னிடம் வேலைபார்ப்பவர் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டதால் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : தன்னிடம் வேலைபார்ப்பவர் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டதால் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாடியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வாழைப்பழ மண்டி வைத்துள்ளார். மேலும் ஆட்களை வைத்து தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரமும் செய்து வந்துள்ளார். தமிழ்செல்வன் கூலி தொழிலாளியாக இருந்து முதலாளியாக வளர்ந்ததால், தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் சகஜமாகப் பேசி பழகுவார்.  இது அவரது மகன் சூரியப்பிரகாஷுக்கு பிடிக்காது என்று கூறப்படுகிறது. 

murder

இந்நிலையில் நேற்று முன்தினம், தன்னிடம் பணிபுரியும் ஒருவரின் உணவைத் தமிழ்ச்செல்வன் சாப்பிட்டுள்ளார். இதைக் கண்ட சூரியப்பிரகாஷ் சம்மந்தப்பட்டவரின் எதிரிலேயே தந்தையை கடுமையாகத் திட்டுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிற்குச் சென்றும் இது குறித்து சண்டை போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சூரியப்பிரகாஷ் கத்தியால் தமிழ்ச்செல்வனின்  மார்பில் குத்தியுள்ளார்.இதனால்  சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

murder

இதைத் தொடர்ந்து சூரியபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழ்செல்வனின் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

puzhal

மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சூரியப்பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதை வாசிக்க: பாட்டு பாடி கிண்டல் செய்த முதியவர்: அடித்து கொன்ற பெண்ணின் குடும்பம்; சேலத்தில் பரபரப்பு!