வேலூர் கோட்டையை திமுகவின் கோட்டையாக மாற்றிய வாக்காளர்களுக்கு  நன்றி – ஸ்டாலின் 

 

வேலூர் கோட்டையை திமுகவின் கோட்டையாக மாற்றிய வாக்காளர்களுக்கு  நன்றி – ஸ்டாலின் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வேலூர் கோட்டையை திமுகவின் கோட்டையாக மாற்றிய வாக்காளர்களுக்கு  நன்றி – ஸ்டாலின் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்பதுபோல, தி.மு.கழகத்தின் வெற்றிப்பயணத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்.தி.மு.கழகத்திற்கு  வெற்றி மாலை சூடியிருக்கிறார்கள் வேலூர் வாக்காளர்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைஉரித்தாக்குகிறேன்.


பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டிய  தேர்தலை, திட்டமிட்டு சதி செய்து, தி.மு.கமீது பழிபோட்டு, வெற்றியைத் தடுத்துவிடலாம் என நப்பாசை கொண்டு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்துசெய்த சூழ்ச்சியும், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றதும் அனைவரும்அறிந்ததே! தனியாக நடைபெற்ற தேர்தல் என்பதால் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும்வேலூரை வளைத்து முற்றுகையிட்டு, அதிகார அத்துமீறல்களுடன் ஆட்டம் போட்டனர். எதிர்க்கட்சியான தி.மு.கழகம்தனது தொண்டர் பட்டாளத்தையும், தோழமைக் கட்சிகளின்  பலத்தையும், பொதுமக்களின் பேராதரவையும் நம்பிக்களமிறங்கியது.
 
மக்களவைத் தேர்தலில் தி.மு.க., மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவதுபோல வாக்காளர்களைஏமாற்றிவிட்டது என தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தி, இழிவு செய்த முதலமைச்சர் உள்ளிட்டஆளுங்கட்சியினரின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும், மத்திய-மாநில ஆட்சியாளர்களின்எதிர்மறைச் செயல்பாடுகளினால் மக்கள் சந்திக்கும் அவலங்களை எடுத்துரைக்கும் வகையிலும், கழகத் தலைவர்என்ற முறையில் நானும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களப்பணியாற்றினோம்.
 


அயராத உழைப்பும், சரியான வியூகமும் கொண்டு செயல்பட்ட உடன்பிறப்புகளின் தொண்டும், வேலூர்வாக்காளர்கள் தந்த ஆதரவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையைக்கழகத்தின் வெற்றிக் கோட்டையாக்கியிருக்கிறது.
 
இந்தியா எதிர்பார்த்த இந்தத் தொகுதியின் முடிவு, தி.மு.கழகத்திற்குச் சாதகமாகியிருப்பதன் மூலம்,நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை நிலைநிறுத்தி, அதற்கான எண்ணிக்கையைப்பெருக்கியிருக்கிறது. இடைத்தேர்தல் போன்ற இத்தகைய தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிபெறுகின்ற வெற்றியே  விதிவிலக்கான இணையிலா வெற்றிதான். இந்த மாபெரும் வெற்றியை, காலமெல்லாம்நம்மை வளர்த்தெடுத்து வழிகாட்டிய நம் நெஞ்சில் வாழும் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில்காணிக்கையாக்கி, ஜனநாயக வழிமுறைகளில்,  திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்கும்  மகத்தானபணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்!
 
வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், தலைவணங்கி,  நெஞ்சார்ந்த நன்றியைஉரித்தாக்குகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.