வேலூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையும் பிரிகிறது | அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

 

வேலூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையும் பிரிகிறது | அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

வேலூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையும் பிரிகிறது | அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 

அப்போது, வேலூர் மாவட்டத்தை பிரித்தது போன்று, நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்கள் உருவாக்கப்படும் திட்டம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிப்பது பரிசீலனையில் உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  மாவட்டங்கள் இப்படி பிரிக்கப்படுவது மக்களுக்கு நல்ல விஷயம் தான் என்றும் தெரிவித்தார்.