வேலூரில் திமுக வென்றது இவர்களால் தான்? ஏ.சி.சண்முகம் பேட்டி!

 

வேலூரில் திமுக வென்றது இவர்களால் தான்? ஏ.சி.சண்முகம் பேட்டி!

சிறுபான்மையினரின் வாக்குகளால் தான் திமுக வேலூரில் வென்றது என்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

வேலூரில் திமுக வென்றது இவர்களால் தான்? ஏ.சி.சண்முகம் பேட்டி!

வேலூர் : சிறுபான்மையினரின் வாக்குகளால் தான் திமுக வேலூரில் வென்றது என்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

ac

வேலூர் மக்களவை  தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்கு வித்தியாசத்தில்  தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்திடம் தோற்றார்.  இந்நிலையில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று   செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சிறுபான்மையினர் மாலை  4 மணி வரை வாக்களிக்க வரவில்லை. அவர்கள் தேர்தலை புறக்கணிப்பது போல இருந்தார்கள். இதையடுத்து சில தலைவர்கள் அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். ஆம்பூர், வாணியம்பாடியில்  இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க வெற்றி பெற்றிருக்காது. சுமார் 15000 வாக்குகள்  வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கும்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,  இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தும் என்னால் வெற்றிபெற முடியவில்லை. இது வேலூர் மக்களுக்கு கிடைத்த இழப்பு.  தேர்தலில் வென்று மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு இல்லாதது  வருத்தம் அளிக்கிறது. வென்றவர்கள் மத்திய அரசின் என்னென்ன திட்டங்களைக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். உண்மையில் திமுக கூட்டணி வேலூரில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால் சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய ஓட்டுக்களைப் பெற்று அவர் வென்றிருக்கிறார்கள்’ என்றார்.