வேறொரு பெண்ணுடன் தொடர்பு…காவலரை எரித்து கொன்ற கள்ளக்காதலி!

 

வேறொரு பெண்ணுடன் தொடர்பு…காவலரை எரித்து கொன்ற கள்ளக்காதலி!

திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில்  கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில்  தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக  வெங்கடேசன் ஜெயாவை பிரிந்தார். இதனால்  இவர்களின் குழந்தை ஜெயாவிடம் வளர்ந்து வருகிறது.

இதையடுத்து வெங்கடேசனுக்கு ஆஷா என்ற வியாசர்பாடியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இது கள்ளக்காதலாக மாற, இருவரும் கடந்த ஆறு மாதமாக திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில்  கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ttn

நேற்று காலை காவலர் குடியிருப்பில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் சென்று பார்த்த போது வெங்கடேசன் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்திருந்தார். அவரை மீட்ட சக காவலர்கள், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவிடம் விசாரித்ததில், வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று கூறினார். ஆனால் வெங்கடேசனோ, ஆஷா  தன்  மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார்.

ttn

இதையடுத்து ஆஷாவை கைது செய்த போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரித்ததில், வெங்கடேசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதை கைவிடக் கூறிய போதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் பெட்ரோல் ஊற்றி கொல்ல  முயற்சி செய்தேன் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டார்.

ttn

இந்நிலையில், தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.