வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

 

வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித், பிரான்சஸ் ஹெச்.அர்னால்டு, பிரிட்டனின் சர் கிரிகோரி பி.விண்ட்டர் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித், பிரான்சஸ் ஹெச்.அர்னால்டு, பிரிட்டனின் சர் கிரிகோரி பி.விண்ட்டர் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேதியலுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித், பிரான்சஸ் ஹெச்.அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூவருக்கு 2018-ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.