வேதாரண்யத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

 

வேதாரண்யத்தில்  இரு சமூகத்தினரிடையே மோதல்: அம்பேத்கர் சிலை உடைப்பு!

ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், அவரது கால் துண்டிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் : வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

clash

இதில் பாண்டியன் தரப்பினர்,   ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், அவரது கால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தகராறு கலவரமாக மாறியது. 

clash

இந்த கலவரத்தில் ஒருதரப்பினர்  அம்பேத்கர் சிலையை உடைத்ததால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.